04/08/2026
பொலன்னறுவை மாவட்ட "சிறந்த கனிஷ்ட்ட இரானுவ படை வீரனாக" (Best Junior Soldier – Polonnaruwa District) தம்பாளை சுபையிர் ஸிப்கி தெரிவு... (எம்.ஸீ.ஏ.ஸமட்)
149,000-க்கும் அதிகமான இலங்கை இராணுவ வீரர்களில், 30,000-க்கும் அதிகமான 25 வயதிற்குட்பட்ட வீரர்களில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட Best Junior Soldier பட்டியலில்,பொலன்னறுவை மாவட்டம் சார்பாக சிபையிர் முஹம்மட் ஸிப்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பொலன்னறுவை தம்பாளை கிராமத்தைச் சேர்ந்தவர். S.T.சுபையிர் (Eravur) மற்றும் A.L. பாத்தும்மா (ஸவ்தாஉம்மா) ஆகியோரின் இளைய புதல்வரான இவர், தற்போது 11 Gemunu Watch படைப்பிரிவில் பணியாற்றி வருவதுடன், 9th NCC (இரத்தினபுரி) யில் Special Operation Trainer(விஷேட தாக்குதல் தொடர்பான பயிற்றுவிப்பாளாராகவும் சேவையாற்றி வருகிறார்.
5 ஆண்டுகால கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் 30-க்கும் மேற்பட்ட மேம்பட்ட (Advanced) இராணுவப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான அங்கீகாரமாக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
✍🏻- Admin TFC
Source - Polonnaruwa Today