மலையகச்சாரல்

மலையகச்சாரல் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மலையகச்சாரல், Dance Studio, Nuwara Eliya.

01/01/2026
வரலாற்றில் முதல் முறையாக அபாகஸ் மனக் கணித முறையில் 2510 மாணவர்கள் இணைந்து 8 நிமிடங்களில் 554,500 கணக்குகளுக்கு விடையெழுத...
25/08/2025

வரலாற்றில் முதல் முறையாக அபாகஸ் மனக் கணித முறையில் 2510 மாணவர்கள் இணைந்து 8 நிமிடங்களில் 554,500 கணக்குகளுக்கு விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்தனர்

யூசீமாஸ் எனப்படும் அபாகஸ் பயிற்சி நிறுவனம் இந் நிகழ்வை இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் வைத்து
சனிக்கிழமை நடத்தியது.

இதில் இலங்கையின் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்த தீவிர பயிற்சி பெற்ற மாணவர்கள் 2510 பேர் பங்கு கொண்டனர்.

இந்தியாவில் தலைமைச் செயலகம் கொண்டுள்ள சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரோபோ விஞ்ஞானி கார்த்திகேயன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான சுகிர்தா, வனிதா மற்றும் செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் அமெரிக்காவில் இருந்து போன்றோர் சிறப்பு நடுவர்களாக உலக சாதனை நிகழ்வைக் கண்காணித்து உறுதி செய்தார்கள். இவர்களுடன் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் நடுவர்கள் 15 பேர் இணைந்து உலக சாதனை படைக்கும் முயற்சியைக் கண்காணித்தார்கள்.

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் 2,3,4, எண்கள் கொண்ட கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு விடையளித்தார்கள். இக் கணக்குகள் 2 முதல் 10 அடுக்குகள் வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.

சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் நடுவர்களால் வழங்கப்பட்டன.

அங்கு பேசிய சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரொபோ விஞ்ஞானி கார்த்திகேயன் குறிப்பிடுகையில் உலக வரலாற்றில் அபாகஸ் மனக் கணித முறையில் மிகவும் கடினமான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளுக்கு 8 நிமிடங்களில் தீர்வு எழுதியது இதுவே முதல் முறை எனக் கூறினார்.

நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா, பொதுச் செயலாளர் ருக்சான், துணைச் செயலாளர் கதிரவன் இன்பராசா போன்றோர் பங்கு கொண்டனர்.

யூசிமாஸ் நிறுவனத்தின் இலங்கைக் கிளைக்கான தலைமை நிர்வாக அலுவலர் சிவ சங்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சித்ரா இளமைநாதன் போன்றோர் நிகழ்வைத் தலைமையேற்று நடத்தினார்கள்.

சோழன் உலக சாதனை படைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுக் கேடயங்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

14/08/2025

*•என் கந்தனே பாடல் தற்போது யூடியூப் தளத்தில் காணலாம் ❤️⚡🕉️*"

*நாவல்நகர் கந்தன் திருவிழா முன்னிட்டு…*
*🎶 யஜீவன் இசையில்,*
*🖋️ யாகாவின் பக்தி வரிகளில்,*
*🙏 திவாகரன் பெருமையுடன் வழங்கும்,*

*✨ “என் கந்தனே” – பக்தி பாடல் வெளியிடபட்டுள்ளது!*

*முருகனின் அருளை,*
*உங்கள் உள்ளம் உணரும் விதமாக,*
*இதயம் தொடும் இசை அனுபவத்திற்கு கண்டு மகிழுங்கள் ! 🎤🔥*

* #என்_கந்தனே #நாவல்நகர்_திருவிழா *
https://youtu.be/JBToiGk3qlk?si=xVBft8u0J5nyXJsU

"கரம் கொடுப்போம் கடைசி மூச்சு உள்ளவரை"தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச உதவிக்கருத்தரங்கு மற்றும் மர...
09/08/2025

"கரம் கொடுப்போம் கடைசி மூச்சு உள்ளவரை"

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச உதவிக்கருத்தரங்கு மற்றும் மரநடுகை நிகழ்வு-2025

தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் ஐம்பதாவது நாள் நிறைவொயொட்டி
தலைவர் திரு.எஸ்.எல்.ஹசீம் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசபந்து எஸ்.நிமலஸ்பரன் J.P மற்றும் செயலாளர் திருமதி.எஸ்.யசோதை ஆகியோரின் அமுலாக்கத்திலும் , அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களின் பூரண நிதி அனுசரணையிலும், நெறியாள்கையிலும், தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் பத்தொன்பதாவது செயல் திட்டமாக தலைவர் திரு.எஸ்.எல்.எம் ஹசீம் அவர்களின் செல்வப்புதல்வன் எம்.எச்.ஹாதி அஹமட் மற்றும் செயலாளர் திருமதி.எஸ்.யசோதை ஆகியோரின் ஜனன தினத்தை முன்னிட்டு இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொத்மலை வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட மமா/கொத்/நாவலர் வித்தியாலயம் மற்றும் மமா/கொத்/கலைவாணி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச உதவிக்கருத்தரங்கு மற்றும் மரநடுகை நிகழ்வு 02.08.2025ம் திகதி சனிக்கிழமை அன்று நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட மமா/கொத்/நாவலர் வித்தியாலயம் லபுக்கலையின் பிரதான மண்டபத்தில்
காலை.08.30மணி முதல் மாலை 04.30மணிவரை நடைபெற்றது. இச்செயலமர்வில் வளவாளராக மமா/கொத்/விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கட்டுக்கிலையின் திரு.த.ராஜேஷ்கண்ணா ஆசிரியர் கடமையாற்றினார். இச்செயலமர்வில் பங்குப்பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி, எழுதுவினைப்பொருட்கள்(கார்ட்போட் கோப்பை, பென்சில், செய்கை தாள், மற்றும் அழிறப்பர்) என்பனவும் வழங்கிவைக்கப்பட்டதோடு. இச்செயலமர்வின் போது இரு பாடசாலைகளிலும் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்காகவும் அவ்விரு மாணவச்செல்வங்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, செல்வன்.எம்.எச்.ஹாதி அஹமட் மற்றும் திருமதி.எஸ்.யசோதை ஆகியோரின் பிறந்ததினத்தை சிறப்பிக்கும் முகமாக இரு பாடசாலைகளின் மாணவர்களின் பொற்கரங்களினால் பிறந்தநாள் வாழ்த்து பாடப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டமை கண்கூடு. இச்செயலமர்வின் போது கொத்மலை வலய கல்விப்பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திரு.எஸ்.திருக்குமரன் ஐயா,மமா/கொத்/நாவலர் வித்தியாலயத்தின் அதிபர் திரு.கு.யோகேஸ்வரன் ஐயா, அமைப்பின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் தேசபந்து எஸ்.நிமலஸ்பரன் J.P, வகுப்பாசிரியைகள், அமைப்பின் உறுப்பினர் தேசபந்து, கவித்தாரகை எஸ்.பரமேஸ்வரி , பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் விஷேட அம்சமாக இரு பாடசாலைகளின் ஏற்பாட்டில் தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் சிறப்பான சேவைகளை வாழ்த்தி பாராட்டி நினைவு சின்னம் மற்றும் நன்றி நவிலல் கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.

சிறகை விரி சிகரம் தொட......!

பொகவந்தலாவ டியன்சின் பாடசாலையின் தொல்பொருள் கண்காட்சி - ஓர் பார்வை வரலாற்று அனுபவங்களை பெற்றுத்தரும் வகையில் அமையப்பெற்ற...
09/08/2025

பொகவந்தலாவ டியன்சின் பாடசாலையின் தொல்பொருள் கண்காட்சி - ஓர் பார்வை

வரலாற்று அனுபவங்களை பெற்றுத்தரும் வகையில் அமையப்பெற்ற பொகவந்தலாவை டியன்சின் பாடசாலையின் தொல்பொருளியல்சார் கண்காட்சி தொடர்பாகவே இப்பதிவு இடம்பெறுகின்றது. மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்குகளை வளர்க்கும் வகையில் கல்வி திட்டமிடல் அமையப்பெற வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைகின்ற இக்காலத்தில், பொகவந்தலாவை டியன்சின் பாடசாலையில் இன்று (07.08.2025) ஆரம்பமாகி நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறகின்ற இலங்கையின் வரலாற்று பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தொல்பொருளியல்சார் கண்காட்சி நேரடி அனுபவங்களின் ஊடாக மாணவர்களுக்கான கல்வியை வழங்குகின்ற ஓர் அருமையான நிகழ்வாகும்.

அந்தவகையில் இன்றைய தினம் டியன்சின் பாடசாலைக்கு சென்று இத் தொல்பொருளியல் கண்காட்சியை பார்வையிட்ட வேளை காணக்கிடைத்த அம்சங்கள் பின்வருமாறு,

1. மனிதனின் வரலாற்று பரிணாமத்தை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்களை சுமந்த பதாதைகள் (வரலாற்று காலம், முன் வரலாற்றுக் காலம், வரலாற்று காலம்)
2. பண்டைய இலங்கையில் பயன்படுத்தப்பட்ட புராதான நாணயங்கள், அவற்றின் பல்வகைமையை வெளிப்படுத்தும் “நாணய விஞ்ஞானத்தை” சாற்றுரைக்கும் புகைப்படங்கள்
3. வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனை வெளிப்படுத்தும் மாதிரி உருவச்சிலை
4. பொலன்நறுவை மற்றும் அனுராதபுர இராசதானிகள் காலத்தில் காணப்பட்ட காவற்கற்கள் (மூன்று வகையான காவற்கற்கள்)
5. பொலன்நறுவை மற்றும் அனுராதபுர இராசதானிகள் காலத்தில் காணப்பட்ட சந்திரவட்டக்கற்கள்
6. எமது முன்னோர்களின் விஞ்ஞான தொழிநுட்ப அறிவை வெளிப்படுத்தும் வகையிலான புராதன மலசல கூடத்தின் அமைப்பு
7. புராதன மக்களின் வைத்தியத்துறை நிபுணத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலான பொலன்நறுவை ஆலாஹன பிரிவெனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ ஓடம்
8. பொலன்நறுவையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சோழர்கால நடராஜர் சிலை
9. பொலநறுவை மற்றும் அனுராதபுர இராசதானிகளுக்குரித்தான புத்தர் சிலைகள்
10. வரலாற்று தகவல்களை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ முன்வைப்புகள்
11. மலையக மக்களின் வாழ்வியல் துன்பத்தை வெளிப்படுத்தும் வகையிலான குடியுரிமை பறிப்பும், இலங்கை இந்திய ஒப்பந்தங்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் நாடுகடத்தப்பட்ட முறை, நாடற்றவர்களின் அவலம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான வீதி நாடகம்

என முழு பாடசாலை வளாகமும் இன்றைய தினம் எமது வரலாற்றினை பறைசாற்றி நின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

அதிபரின் தலைமைத்துவமும், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பும்......!

இத் தொல்பொருளியல் கண்காட்சி முறையாக முன்னெடுக்கப்படுவதற்கு பாடசாலையின் அதிபர் திரு. பொன். பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவமும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்புமே காரணமாகியது. பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பாடசாலை சமூகத்தை ஓரணியில் திரட்டி கண்காட்சியை நடாத்துவது முழு பாடசாலை சமூகத்தின் வெற்றியே. குறிப்பாக கண்காட்சியை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முழுமையாக இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலையின் மாணவர்களையும், வெளிப்பாடசாலைகளிலிருந்து வருகின்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் அன்பாக வரவேற்பதும், பராமரிப்பதும் பாராட்டுக்குறியதே.

மாணவர்களின் ஆளுமைகள்…..!

குறித்த கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள வரலாற்று தொல்பொருட்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகின்ற மாணவர்களின் பேச்சுத்திறன் விடயத்தெளிவு, முன்வருகை, என்பன காண்போரை வியக்கவைத்தது.

வெளிப்பாடசாலைகளிலிருந்து வருகைத்தரும் ஆசிரியர்களுக்கான உபசாரம்……..!

கண்காட்சியை பார்வையிட மாணவர்களை அழைத்துவரும் வெளிப்பாடசாலை ஆசிரியர்களை பாடசாலையின் அதிபரும், ஏனைய ஆசிரியர்களும் மனமகிழ்வோடு இன்முகம் காட்டி தேனீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி உபசரித்து அனுப்பி வைத்தது டியன்சின் பாடசாலையின் வந்தோரை போற்றும் தனித்துவத்தினை வெளிப்படுத்தியது.

வீதி நடகம் வியப்பூட்டியது……!

தொல்பொருளியல் கண்காட்சியை நடாத்திகொண்டிருக்கும் போது எம் மலையக மக்களின் பிரஜா உரிமை பறிப்பு, இந்திய வம்சாவழி தமிழ் மக்களை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தங்கள், இவ்வொப்பந்தத்தில் கைவிடப்பட்ட நாடற்ற மக்களின் அவலம் என்பவற்றை உணர்ச்சி பொங்க டியன்சின் பாடசாலை மாணவர்கள் வீதி நாடகமாக பாhத்திரமேற்று நடித்து காண்போரை வியப்பூட்டியமை இக்கண்காட்சியின் மகத்தான வெற்றியாகும். குறிப்பாக இன்றைய நாள் முடிவில் இந் நாடகம் 6 முறை பாடசாலை வளாகத்தில் வருகின்ற பார்வையாளர்களுக்காக நாடக குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டது. எத்தனை முறை நாடகம் நடிக்கப்பட்டாலும் பாத்திரமேற்று நடித்த மாணவர்கள் மத்தியில் எந்தவொரு சோர்வும் இல்லாமல் இருந்தது எங்களுக்கு வியப்பினை தந்தது. சிறப்பானதொரு நாடக குழுவினை வளர்த்து வரும் டியன்சின் பாடசாலை சமூகத்திற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இக்கண்காட்சியின் விளைவு…………!

பொகவந்தலாவ டியன்சின் பாடசாலையில் இடம்பெற்றுவரும் இத் தொல்பொருளியல் கண்காட்சி பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்று பாடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரடி கற்றல் அனுபவங்களை தருகின்றது. குறிப்பாக எமது பண்டைய இலங்கையரின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்கள், விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சி என்பவற்றை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.

கடந்த காலத்திலும் டியன்சின் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆய்வு திறனை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் ஆய்வு மாநாடுகளும் நடாத்தப்பட்டன. இவ் ஆய்வு மாநாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்ததை இவ்விடத்தில் நினைவுகூற விரும்புகின்றேன. இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியிலும் ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாடசாலையின் அதிபருக்கும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது மலையக சமூகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகும். உங்கள் முயற்சிகள் தொடரட்டும் ….

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன் கொழும்பில் வசித்து வரும் தினைஷ் ...
08/08/2025

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

கொழும்பில் வசித்து வரும் தினைஷ் மற்றும் சுதர்சினி தம்பதிகளின் 6 வயதான மகன் தினேஸ் ஹெதேவ். இவர் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.

சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வரும் ஹெதேவ் இன்று சென்ட் பெனடிக்ட் கல்லூரியில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். இவரது இந்த முயற்சியைக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் திரு. ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் திரு. இந்திரநாத் பெரேரா போன்றோர் சிறுவனின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அவருக்குச் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

03/08/2025

Alien 👽 கொத்து சாப்பிட வந்தாச்சு..

“Lankan கொத்து” official music video link 👇

https://youtu.be/4UYgOalCEsg?si=iYExM4rrdwKYiDWL

Share பண்ணுங்க..
Like பண்ணுங்க..
YouTube la 1st Comment பண்ணுங்க..
Give your support.. thank you guys..

ொத்து

Inauguration of VKC in the Kandy DC - Rev.Fr. Newman Peiris, Director Caritas Kandy SETIK-along with  Rev.Fr.Dosmin Raj,...
24/07/2025

Inauguration of VKC in the Kandy DC - Rev.Fr. Newman Peiris, Director Caritas Kandy SETIK-along with Rev.Fr.Dosmin Raj, Coordinator N'Eliya District, Rev.Fr.Rangana Perera Parish Priest Mattakelle , Rev. Sisters & Several invitees handed over the Centre to the Farmers today (23.07.2025)

Address

Nuwara Eliya
22200

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலையகச்சாரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category