28/04/2014
தினமும் அரை நாள் (12 மணி நேரம்)
கடுமையாய் உழையுங்கள்..,
வாய்ப்புகளை திறக்கும்
சாவி உழைப்புதான்.
வெற்றி ஒன்றையே மனம் நினைக்க
வேண்டும்,
வெற்றி ஏணியில்
ஒவ்வொரு படியாகத்தான்
ஏறவேண்டும்,
ஒரு மரத்தின் உச்சியை அடைய
இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று யாராவது ஏற்றி
விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது,
வியாபார
அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது
…,
பிடித்த காரியத்தை செய்ய
வேண்டும் என்பதைவிட செய்யும்
காரியத்தை நமக்கு பிடித்ததாய்
மாற்றி கொள்ள வேண்டும்.
முடியாது, நடக்காது போன்ற
வார்த்தைகளை சொல்லவே
கூடாது.
பாதுகாப்பாய் ஒரே இடத்தில்
இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம்,
பாதி அறிவு.
துணிச்சலாய் முடிவுகள் எடுக்க
வேண்டும்.
நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம்
உழைக்க வேண்டும்.
மற்றவர்களை உங்களுக்கு உழைக்க
வைப்பதில் தான் உங்கள்
புத்திசாலித்தனம் இருக்கிறது.
வாய்ப்புகளை பயன்படுத்திக்
கொள்ள தயாராக இருக்க
வேண்டும்.
எதையும் நாளை என்று தள்ளி போட
க்கூடாது.
கைக்கடிகாரத்தை
கொடுத்துவிட்டு அலாரம்
கடிகாரம் வாங்குங்கள்.
மற்றவர்களை வழிநடத்த
வேண்டுமென்று நினைக்கக் கூடாது.
கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த
நன்மையும் கிடைக்காது.
சந்தோஷத்தை கொடுப்பது பணம்
மட்டுமல்ல.
உன்மேல் நீ நம்பிக்கைவை.