20/05/2026
மூதூர் கிரிக்கெட் சபை(MCB) மற்றும் மூதூர் கிரிக்கெட் சம்மேளனம்(MCA) இணைந்த சினேகபூர்வ சந்திப்பு.... (@ Children Park - 08.00Pm)
எதிர்கால கிரிக்கெட் வளர்ச்சி, வீரர் முன்னேற்றம் மற்றும் விளையாட்டு ஒற்றுமையை மையமாகக் கொண்டு இரு கிரிக்கெட் சபைகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த சிறப்பான கலந்துரையாடல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு முன்னேற்ற முயற்சியாகும்.
வெற்றிகளால் மட்டுமல்ல, நல்லிணக்கத்தாலும் ஒன்றுபட்ட சிந்தனைகளாலும் தான் ஒரு விளையாட்டு உயர்வடைகிறது என்பதை இந்த சந்திப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், கிரிக்கெட்டின் தரத்தையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தவும் இந்த இணைப்பு உறுதியான பாலமாக அமையட்டும்.
இரு சபைகளின் இந்த அழகிய ஒற்றுமை பயணம் எதிர்காலத்தில் பல சாதனைகளையும், மகத்தான வெற்றிகளையும் உருவாக்க இறைவன் அருள் புரிய எமது நிருவாகம் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!