28/04/2025
அஸ்ஸலாமு அலைக்கும் ;
அல்ஹம்துலில்லாஹ்!
மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் மின்னொளி மைதானமாக மாற்றப்பட்டதன் பின் மருதம் விளையாட்டுக் கழகத்தால் முதன் முதலாக நடத்தப்பட்ட சுற்றுப்போட்டித் தொடரில் எமது பென்சீன் விளயாட்டுக் கழகம் சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.
இத்தொடரில் எமது கழகமானது,
முன்காலிறிதியில் கல்பனா அணியையும், காலிறிதியில் அஸ்னல் அணியையும், அரையிறிதியில் யுனிவெர்ஸ் அணியையும், இறுதியில் மருதம் அணியையும் வீழ்த்தி இச் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
இச் சாம்பியன் பட்டத்துடன் எமது அணியானது 6வது சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.
இவ்வருடம் இடம் பெற்ற இரண்டு தொடர்களில் அரையிறிதியில் தோல்வியை தழுவியிருந்தாலும் எமது அணி வீரர்களின் பொறுமையாலும், அவர்களின் திறமையினாலும், அல்லாஹ்வின் உதவியுடனும் இவ்வருடத்தின் மூன்றாவது தொடரில் சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது எமது பென்சின் கழகம்.
இவ்வெற்றிக்கு உழைத்த எமது அணி வீரர்களுக்கும், எம்முடன் பக்க பலமாக இருந்த எமது அணியின் நிருவாக உறுப்பினர்களுக்கும், எமது அணியின் ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் இச் சுற்றுப்போட்டியைத் திறன்பட நடத்திய மருதம் அணியினருக்கும், மருதமுனை கிரிக்கட் சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.