17/08/2026
💯
ஒரு ஆசிரியரால் வகுப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்… அது எப்போதும் ஆசிரியரின் தவறல்ல
Shafna Zein
பாடசாலை உளவியல் ஆலோசகர்
ஒரே பள்ளியில் 5 வருடங்களாக பணியாற்றும் ஒரு ஆசிரியர்.
பல வருட அனுபவம்.
பல மாணவர்களை கற்பித்த அனுபவம்.
பல வகுப்புகளை வெற்றிகரமாக கையாண்ட அனுபவம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு சென்றவுடன்…
“இந்த வகுப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை…”
என்று அவர் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அப்போது நாம் உடனே,
“Teacher-க்கு class control இல்லை.”
“இத்தனை வருட experience இருந்தும் ஏன் control பண்ண முடியவில்லை?”
என்று கேட்கிறோம்.
ஆனால்…
ஒரு ஆசிரியரின் அனுபவத்தை வைத்து மட்டும் அவருடைய திறமையை மதிப்பிட முடியாது.
ஒவ்வொரு வகுப்பும் வேறுபட்டது.
ஒவ்வொரு மாணவரின் குணமும் வேறுபட்டது.
சில வகுப்புகளில் மாணவர்கள் ஆசிரியரின் வார்த்தையை மதித்து கேட்பார்கள்.
சில வகுப்புகளில் தொடர்ந்து பேசுவார்கள்.
சிலர் விதிகளை மீறுவார்கள்.
சிலர் ஆசிரியரின் அறிவுறுத்தலையே பொருட்படுத்தமாட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.
ஒரு ஆசிரியர் தினமும் வகுப்பறைக்குள் செல்வது பாடம் கற்பிப்பதற்காக மட்டுமல்ல.
அவர் மாணவர்களின் நடத்தை, உணர்வுகள், பிரச்சினைகள், கவனச்சிதறல்கள், ஒழுக்கம் என பலவற்றையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டியுள்ளது.
தொடர்ந்து ஒரு வகுப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனால், அந்த ஆசிரியருக்கும் மன அழுத்தம் ஏற்படலாம்.
“நான் என்ன தவறு செய்கிறேன்?”
“ஏன் என்னுடைய பேச்சை கேட்கவில்லை?”
“என்னால் ஏன் இந்த வகுப்பை கையாள முடியவில்லை?”
என்று அவர் தன்னையே கேள்வி கேட்கத் தொடங்கலாம்.
அந்த நேரத்தில் அவருக்கு தேவைப்படுவது குற்றச்சாட்டு அல்ல.
ஆதரவு.
ஒரு ஆசிரியர் ஒரு வகுப்பை தனியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,
அது ஆசிரியரின் தோல்வி என்று பார்க்காமல்,
அந்த வகுப்பிற்கு கூடுதல் வழிகாட்டுதல், தெளிவான விதிமுறைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஆதரவு தேவைப்படுகிறதா?
என்று பார்க்க வேண்டும்.
ஆசிரியரும் ஒரு மனிதர்தான்.
அவருக்கும் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது.
அவருக்கும் சோர்வு வரும்.
அவருக்கும் மன அழுத்தம் ஏற்படும்.
அதனால் ஒரு ஆசிரியர் ஒரு வகுப்பை கையாள சிரமப்படுகிறார் என்பதற்காக,
அவருடைய 5 வருட அனுபவத்தையும், திறமையையும், அர்ப்பணிப்பையும் ஒரே நாளில் கேள்விக்குள்ளாக்காதீர்கள்.
சில நேரங்களில் பிரச்சினை,
“ஆசிரியரால் வகுப்பை கட்டுப்படுத்த முடியவில்லை”
என்பது அல்ல.
“அந்த ஆசிரியர் தனியாக சமாளிக்க வேண்டிய அளவுக்கு அந்த வகுப்பின் சவால் அதிகமாக இருக்கிறது”
என்பதாக இருக்கலாம்.
ஆசிரியரை குறை சொல்வதற்கு முன்,
ஒருமுறை அவருடைய இடத்தில் நின்று பாருங்கள்.
அப்போது தான் ஒரு ஆசிரியர் தினமும் வகுப்பறைக்குள் எவ்வளவு பெரிய பொறுப்புடன் நிற்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
— Shafna Zein
பாடசாலை உளவியல் ஆலோசகர்