11/06/2026
Congratulations
இலங்கை கூடைப்பந்தாட்ட வரலாற்றில் புதிய மைல்கல்: முதன்முறையாக தடம் பதித்த யாழ் மாணவி லூட்சி றெஜினஸ்!
தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்ட (U-18) பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி லூட்சி றெஜினஸ் (Luchi Reginas) தெரிவு செய்யப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார்.
யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியின் மாணவியான இவர், இவ்வாறான தெற்காசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதிபெற்ற வட மாகாணத்தின் முதலாவது பாடசாலை மாணவி என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இத்தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, இரண்டாம் இடத்தைப் (Runners-up) பெற்றுக்கொண்டது.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கும், வட மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள லூட்சி றெஜினஸின் இந்த அசாத்திய சாதனைக்குப் பின்னால் அவரது பயிற்சியாளரான தனுஷ் ராஜசோபனா அவர்களின் சிறந்த வழிகாட்டலும் கடின உழைப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.