06/11/2015
ஒரு காட்டிற்குள் உள்ள விலங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு பள்ளி துவங்கியது....பள்ளி என்றால் சாதாரண பள்ளி கிடையாது.....அது ஒரு இன்டர்நேசனல் பள்ளி.எல்லோரும் எல்லா திறமைகளையும் பெற வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளியில் மரம் ஏறுதல், நீந்துதல், ஓடுதல், பறத்தல், பாடுதல் என பல பயிற்சிகள் வழங்கப்பட்டது....பறவைகள் பாடும் வகுப்புகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியது.ஆனால் நீச்சல் வகுப்பிலும் , மரம் ஏறுதலிலும் சொல்லிக் கொள்ளும் படி மதிப்பெண்கள் இல்லை. அணில்கள் அழகாக மரம் ஏறி அவ்வகுப்பில் கிளாஸ் பர்ஸ்ட் வந்த்து..ஓடும் பயிற்சியில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.ஆனால் மற்றவர்களின் நிலைமை தலைகீழ். மீன்கள் நீந்தும் பயிற்சியில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் தரையில் நடக்கும் மற்ற பயிற்சியில் கலந்து கொள்ள முடியாமல் வகுப்புகளை கட் அடித்தே வந்தது...ஆக எல்லாரும் தங்களை திறமையற்றவர்களாக தாழ்வாகவே கருதி படித்து வந்தார்கள்.... காட்டிற்குள் உள்ள இந்த பள்ளிக்கும் நாட்டிற்குள் உள்ள பள்ளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...... எல்லோரையும் எல்லாவற்றிலும் திறமைசாலிகளாக்குகிறேன் என்று இங்கேயும் கூட இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.