08/06/2025
சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் கிரிக்கெட் போட்டி சாயர்புரம் ஜூன் 9
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஆல்வின் பிரேம்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினர்களாக சுப்பிரமணியபுரம் சேகர தலைவர் டேவிட் ராஜ் கலந்து கொண்டார்.எஸ்விபிஎஸ் சுனில் குமார் எஸ்விபிஎஸ் சுதாகர் மைக்கேல் முன்னிலை வகித்தனர் ஹெலன் சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் முதல் பரிசு 14000ரூபாய் பண்டார விளை மேசியா அணியும், இரண்டாம் பரிசு 9000ரூபாய் சுப்பிரமணியபுரம் கிரிக்கெட் கிளப் அணிக்கு வழங்கப்பட்டது வெற்றி பெற்ற அணியினரை சுப்பிரமணிய சேகர தலைவர் டேவிட் ராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார். போட்டியினை சிறப்பாக சுப்பிரமணியபுரம் கிரிக்கெட் கிளப் அணியினர் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் இணைந்து செய்து இருந்தனர்.