14/09/2017
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைமையின் கீழ் இயங்கும் Parangipettai Sports Federation (PSF)யின் 'பெருநாள் கொண்டாட்டம்' (EID Fiesta 2K17) கடந்த 03/09/17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரண்டாம் சுற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
முதல் சுற்றில் Running Race, Long Jump, Shot Put மற்றும் Kabbadi ஆகிய விளையாட்டு போட்டிகள் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு இரண்டாம் சுற்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் தலைவர் ஜனாப் கிங் காலித் அவர்கள் தலைமை வகித்தார். மேலும், கடலூர் மாவட்ட Sports Development Authority of Tamilnadu அமைப்பின் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் (DSO) திரு. எம்.ராஜா அவர்கள், பரங்கிப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் திரு. டி. செல்வம் அவர்கள், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப் ஹாஜி டாக்டர். எம்.எஸ். முஹம்மத் யூனுஸ் அவர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப். எஸ்.ஓ. செய்யது ஆரிப் அவர்கள் மற்றும் அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் தாளாளர் ஜனாப் எஸ்.ஐ. அப்துல் காதர் மதனி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினர்.
இறுதியில் mypno.com தளத்தின் ஆசிரியர் ஜனாப். Abdul Rahman Ibnu Hanifa அவர்கள் நன்றியுரை வழங்கினார்.