02/11/2020
#வெற்றி_பெற்றோம்🦋
🌻ஞாயிறு மதியம் புதிய சொந்தத்தில் கோவை சின்னியம்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி👰.
பெரும்பான்மை மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் ஃபிரீயான நாள்🆓. ஆனால் நம்பியூர் கடை மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் பிசியான நாள்🛠️⚙️.
காலையில்🌅 பிஸியாக பல வேலைகளை முடித்துவிட்டு 10:30🕦 மணிக்கு சைக்கிளில் கணக்கம்பாளையம் வரை சென்று, அங்கிருந்து மாமா Balu Samy மற்றும் அண்ணன் கொங்கு குமார் அவர்களுடன் கோவை திருமண நிகழ்ச்சியில்👰 பங்கேற்றுவிட்டு 3🕒 மணியளவில் #கணக்கம்பாளையத்திலிருந்து_நம்பியூருக்கு_தொரவலூர் வழியாக சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தேன்🛣️...
இந்த #இயற்கை_அன்னையின்_செல்லமகன்🌏💚 #மரங்களின்_காவலர்🌳💪 நேற்று தொலைபேசியில்☎️ தொடர்பு கொண்டு பேசி இருந்தார்...
ஞாயிற்றுக்கிழமை அவரைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.
தொரவலூரை தாண்டியவுடன் அண்ணனுக்கு அழைத்தேன்☎️.
🗣️"தம்பி கண்டிப்பா வீட்டுக்கு வாங்க" என்று சொல்லிய 5 நிமிடத்தில் #களர்வழி_பிரிவில் அந்த #அன்பு_இல்லத்திற்கு🏡 வந்து சேர்ந்தேன்.
அண்ணனின் கையால் #சுக்கு_தட்டி போட்டு #கொத்தமல்லி_கரும்புசக்கரையுடன் 💛 #அன்பு கலந்த பானத்தின்☕♨️ சுவையில்😋 சிறிது நேரம் #மெய்மறந்து_போனேன்.
🌺🌺மெய் தெளிந்தவுடன் #என்_அறிவை_தெளிவாக்கினார்.
ஆம் வீட்டைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அவர் நட்டு #வளர்த்திவரும் 🌿மகிழம், 🌿புங்கன், 🌿அழிஞ்சில், 🌿பாலை மேலும் பல #நம்நாட்டு_மரக்கன்றுகளுக்கும் அதன் பல்லுயிர்களான #சிறு_குறு_பறவைகளுக்கும்🐦🦅🦉🦜 என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்...
வீட்டின் பின்புறம் இருக்கும் தனது சிறு பண்ணையிலிருந்த 🌷🌱 #மகிழம்_மரக்கன்றை எனக்கு மகிழ்வுடன்💜 கொடுத்தார்.
🕊️1956 முதல் நம்பியூரில் #பெரிய_ஓனர் கடை ஆரம்பிக்கும் பொழுது, கடைக்கு முன் #பூவரசமரம் இருக்குமாம். அந்தக் காலத்தில் நம் கடையை #பூவரசமரத்துக்கடை📛 என்றுதான் சொல்வார்களாம். வெகுநாட்களாக கடைக்கு முன்பு மகிழமரம் நட வேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்தார்.
🐞🚲ஏற்கனவே தோட்டத்தில் இருக்கும் தன் இரண்டு மிதிவண்டிகளுக்கு #உயிர்_கொடுக்கவேண்டும்💕 என்ற ஆசையில் தன் 👩👦துணைவியார்,🙎மகன், 🧘🏾♂️மச்சான், 🧘🏿♂️சித்தப்பா ஆகியோர் துணையுடன் இரண்டு சைக்கிள்களையும்🚲🚲 நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தார்.
இரண்டு வண்டிகளையும் #கல்லு_தடத்தில்_தோட்டத்தில் ஓட்டுவதற்கு ஏற்றார்போல் தயார் செய்துகொடுக்கச் சொன்னார்.
👉🏾👉🏾இன்னொரு புதியசைக்கிள், தன் சொந்த பயன்பாட்டிற்காக ரோட்டில் மட்டும் ஓட்டும் வகையில் வேண்டுமென்று நம் கடையில் #தேடி_அலசியபோது, தந்தையும் மகனும் இருவேறு சைக்கிள்களை தேர்வு செய்தனர்.🔀
🤜👊🗞️இறுதியில் சீட்டு குலுக்கி எடுத்த போது முடிவானது.
ஊர் ரோடுகளில் ஸ்மூத்தாக பயணிக்க வேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தார்போல இரண்டு டயர்களையும் நைலான் ஃபினிசிங் கொண்ட டயர்களாக மாற்றிக் கொடுக்கப்பட்டது.
🌺அண்ணனின் அன்பான பேச்சும்
🌺அண்ணியின் எதார்த்த வார்த்தைகளும்
🌺மகனின் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும்
🌺மச்சானின் பணிவான அணுகுமுறையும்
🌺சித்தப்பாவின் திடமான மனமும் எங்கள் மனங்களைக் குளிர்வித்தன.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபிறகு புதுவண்டியில் 12 கி.மீ ஓட்டிச் சென்று தன் அன்புக்கூட்டில் ஒரு புதிய உயிராக இந்த மிதிவண்டியைச் சேர்த்திக்கொண்டார்.
நேற்று மாலை, நம்ம கடை, இப்பேர்ப்பட்ட 🧡நற்சொந்தம் கிடைத்துவிட்டது என்ற #வெற்றி_களிப்பில்🤸🏽♂️ திளைத்தது.
ஆம் அவர்தான் இயற்கையின்மீது தீராத அன்பு கொண்ட ஐயா வெற்றிவேல் Rc Vetrivel
இவர் கிராமிய மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களை இயற்கையோடு வாழ பழக்கிக்கொண்டிருக்கிறார்.
ஓரிரு நாட்களில் சில முக்கியமான நண்பர்களின் (இயற்கை அன்னையின் செல்லப்புதல்வர்களின்) Deepak Venkatachalam, Ramamurthi Ram, Target ZerO Environment Conservation Trust தொடர்பும் கிடைத்துள்ளது அவர்களும் விரைவில் நம் சொந்தத்தை பலப்படுத்துவார்கள், #அன்பு என்ற #ஒற்றை_ஆயுதத்தால்.
#வெற்றிவேல் ஐயாவைப் பெற்றதால், #வெற்றி_பெற்றோம்💪🏾