இராமநாதபுரம் எருதுகட்டு பேரவை

  • Home
  • India
  • Kilakarai
  • இராமநாதபுரம் எருதுகட்டு பேரவை

இராமநாதபுரம் எருதுகட்டு பேரவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இராமநாதபுரம் எருதுகட்டு பேரவை, Sports League, Krishnapuram , Kanjirangudi, Kilakarai.

திருவாடானை வட்டம் ஓரியூரில் 30.08.23 அன்று நடைபெறும் எருதுகட்டு விழாவிற்கு , ஓரியூர் கிராமத்தின் சார்பாக பாக்கு வைக்கப்ப...
27/08/2023

திருவாடானை வட்டம் ஓரியூரில் 30.08.23 அன்று நடைபெறும் எருதுகட்டு விழாவிற்கு , ஓரியூர் கிராமத்தின் சார்பாக பாக்கு வைக்கப்பட்டது.
கிராம பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் நன்றி🙏

22/08/2023

*அழகரின் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி🙏*

அழகரின் பெயரில் புதிதாக இந்த ஆண்டு களம் காண இருக்கும் காளைக்கு, அழகரின் நினைவிடத்தில் வைத்து சாமி கும்பிட்டு அழகர் பெயர் காளைக்கு விடப்பட்டது.
K.ஆதித்தன்

22/08/2023
17/08/2023

Chief Minister of Tamil Nadu
M. K. Stalin
Ramanathapuram District Police
Thoothukudi District Police
அனுப்புநர்:-
திரு.K.ஆதித்தன்,
தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்,
மாவட்ட கவுன்சிலர் திருப்புல்லாணி ஒன்றியம் (கிழக்கு),
தலைவர் ஜல்லிக்கட்டு வடமாடு மற்றும் எருதுகட்டு விழா பேரவை,
இராமநாதபுரம் மாவட்டம்.

பெறுநர்:-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் தனிப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

மதிப்பிற்குரிய ஐயா,
பாரம்பரிய வீரவிளையாட்டுகள் ஜல்லிகட்டு, வடமாடு, எருதுகட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடுமையாக வாதாடி அரும்பாடுபட்டு அனுமதி வாங்கி கொடுத்ததால், தமிழக முதல்வருக்கு மக்களால் பல பாராட்டு விழாக்கள் நடைபெற்று வரும் இச்சூழ்நிலையில்.

இவ்விழாக்களில் பாதுகாப்பு வேண்டி, விழா தொடங்குவதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பு , விழா அழைப்பிதழை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஊர் முக்கியஸ்தர்கள் கொடுக்கும்பொழுது,
அதிகாரிகள் அந்த மனுவை வாங்கி வைத்துக் கொண்டு அதற்கு முறையான பதில் சொல்லாமல் , போய் வாருங்கள் பார்க்கலாம் என்று சொல்கின்றனர்.

ஆனால் விழா துவங்குவதற்கு முதல் நாள் இரவு, விழா நடத்தும் கிராமத்திற்கு வந்து விழாவை நிறுத்த சொல்கின்றனர்
மேலும் விழாக்களுக்கு அரசு அனுமதி இருப்பதே அவர்களுக்கு தெரியாதது போல்,
எந்த அரசு அனுமதி வழங்கியது? எப்போது வழங்கியது?
உச்ச நீதிமன்ற அனுமதி கடிதத்தை கொடுங்கள் என்று விழா நடத்தும் கிராமத்தினரிடம் கேட்கின்றனர்?

இதனால் விழா நடத்த முடியாமல், அனைவரும் அதிர்ச்சியையும் மன வேதனையும் அடைகின்றனர்.

இதுபோன்ற செயலால், பாரம்பரியமாக விழாக்கள் நடத்தி வரும் பலநூறு கிராமங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் மிகுந்த மனவேதனையுடன் அவர்கள் வருத்தத்தை அரசின் மீது வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் அதிகாரிகளின் இந்த செயல்பாடு, தமிழக அரசின் முயற்சியை கொச்சைப்படுத்தும் வகையிலும்,
இந்த விழாக்கள் மீண்டும் தடை செய்யப்பட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி
ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

ஆகையால், இது போன்ற சில அதிகாரிகளால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை போக்கி,
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பெற்று தந்த அனுமதியின் பலன் மக்களை முழுமையாக சென்றடைந்து, மகிழ்ச்சியுடன் விழாக்கள் நடத்தும் வண்ணம், சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்திலேயே எளிமையான முறையில் அனுமதி வழங்க , உயர்திரு காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப ஆவண செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

தங்கள் உண்மையுள்ள
K.ஆதித்தன்
செல்:-9442321617

Send a message to learn more

பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் அதிகாரிகளால் தடை செய்யப்படுவதை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முதல்வர...
17/08/2023

பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் அதிகாரிகளால் தடை செய்யப்படுவதை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முதல்வர் குறைதீர்க்கும் பிரிவிற்கு மனு அனுப்பியுள்ளோம்.
-ஆதித்தன் வினோத்.

தூத்துக்குடி மாவட்டம் விலாத்திகுளம் வட்டம் மேல்மந்தையில் வீற்றிருக்கும் அருள்மிகு 61 பந்தி 21பூடம் ஸ்ரீ பதினெட்டாம் படி ...
16/08/2023

தூத்துக்குடி மாவட்டம் விலாத்திகுளம் வட்டம் மேல்மந்தையில் வீற்றிருக்கும்
அருள்மிகு 61 பந்தி 21பூடம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி மூலிகை வனக் கோவில் ஆடி அமாவாசை உற்சவ திருவிழாவை முன்னிட்டு நாளை (17.08.2023) நடைபெறவிருக்கும் வடமாடு விழாவிற்கு இன்று வடம் பதிக்கப்பட்டது.

-ஆதித்தன் வினோத்

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாடு எருதுகட்டு போன்ற பாரம்பரிய விழாக்களுக்கு எளிமையான முறையில் அனுமதி அளிக்க கோரி மாவட்ட ஆட...
15/08/2023

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாடு எருதுகட்டு போன்ற பாரம்பரிய விழாக்களுக்கு எளிமையான முறையில் அனுமதி அளிக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு.
ஆதித்தன் வினோத்

இராமநாதபுரம் மாவட்ட வடமாடு நலச்சங்க தலைவர் அப்பா ஆதித்தன்❤️ அவர்களின் விழா ஒருங்கிணைப்பில்🤝 அடுத்த நடைபெறவிருக்கும் வடமா...
11/08/2023

இராமநாதபுரம் மாவட்ட வடமாடு நலச்சங்க தலைவர் அப்பா ஆதித்தன்❤️ அவர்களின் விழா ஒருங்கிணைப்பில்🤝 அடுத்த நடைபெறவிருக்கும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள்.
1.முதுகுளத்தூர் வட்டம் பூசேரி
🔥இளைஞர்கள்💪 மற்றும் கிராம பொதுமக்களால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை🙏❤️ முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் வடமாடு விழா✨🎈🎉.
மற்றும்
2.தூத்துக்குடி மாவட்டம் விலாத்திகுளம் வட்டம் மேல் மந்தை வீற்றிருக்கும்
அருள்மிகு 61 பந்தி 21பூடம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி🙏மூலிகை வனக் கோவில்🙏 ஆடி அமாவாசை உற்சவ திருவிழாவை முன்னிட்டு.

ஆதித்தன் வினோத்

27/07/2023

தந்தையின் அன்புக்கு முன்னால் எதிரியும் நண்பராவார், சீறி பாயும் காளையும் சிறுபிள்ளை போல் அமைதியாகும். குழந்தைகளை தாய் பராமரிப்பது போல் வீர விளையாட்டு காளைகளை அப்பா வளர்த்து வருகிறார்.❤️Vinoth Athithan

Address

Krishnapuram , Kanjirangudi
Kilakarai
623517

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராமநாதபுரம் எருதுகட்டு பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category