21/05/2026
இந்த மகிழ்ச்சியான தருணத்தை திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது 💐 திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில் முப்பெரும் விழா இன்று காலை திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள டெபி வூசு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா தமிழ்நாடு மாநில கால்பந்து சங்கத் தலைவர் திரு. அரசன் எஸ். சண்முகம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க தலைவர் திரு. எஸ். மணிகண்டன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜே.கே. சங்கரா பப்ளிக் ஸ்கூல் தலைமை ஆசிரியர் திருமதி. டி. ஜெயலட்சுமி அவர்கள் மற்றும் டெபி குரு ஃபிட்னஸ் கோச் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக, வூசு விளையாட்டுத் துறையின் கீழ் அரசு பணியில் சேர்ந்த சுவஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வூசு விளையாட்டு இடஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெட்னரி படிப்பில் சேர்க்கை பெற்ற ஜீவா அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேசிய அளவில் 2025–26 ஆம் ஆண்டில் பதக்கம் பெற்ற பல மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க பொருளாளர் திருமதி. மு. கவிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க செயலாளர் திரு. கே.ஆர். ஜாக்கி சங்கர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இவ்விழாவில் வீரர்கள், பெற்றோர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.