Saaral

Saaral Saaral Social Welfare and Sports Academy
Chromepet, chennai, Tamil nadu
Contact no: 9840493662

17/05/2022

#கியூபாகல்விமுறை;-

1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் சோஷலிச அரசு பதவி ஏற்றபோது கியூபாவின் எழுத்தறிவு 52% மட்டுமே. அந்த நிலையிலிருந்து முன்னேறி இன்று 99.7% எழுத்தறிவு பெற்ற நாடாகக் கியூபா மிளிர்கிறது. அமெரிக்கா உட்பட 62 வளர்ந்த நாடுகளின் குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 70 புள்ளிகளாக இருக்கும்போதே கியூபா குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 100 புள்ளிகளை எட்டியது.

#கியூபாவில்கல்விஎன்பது #பெற்றோர்களின்கவலைஅல்லபிறந்த #குழந்தையின்சுகாதாரமும்கல்வியும் #அரசின்பொறுப்பு.
குழந்தைகள் பள்ளி செல்லும் வயது ஆறு. தாய்மொழியான ஸ்பானிஷில் மட்டுமே கல்வி. தொடக்கப்பள்ளிப் படிப்பு ஆறு ஆண்டுகள். புத்தகம், நோட்டு, வீட்டுப்பாடம், பரீட்சைக்கு இடையிலான போராட்டம் அல்ல அது. இசை, தோட்டம் போடுதல், சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று இவையே தொடக்கக் கல்வியின் அடிப்படை பாடத்திட்டம். மருத்துவக் குழுக்கள் இல்லாத கல்வி நிறுவனங்கள் இல்லை. பள்ளிக்கூடம் போகாத குழந்தை என்று யாரும் கிடையாது.

100 கியூபா குழந்தைகளில் உயர்நிலைப் பள்ளி இறுதி படிப்பை முடிப்பவர்கள் 99 பேர். இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தைகள் 46, பெண்குழந்தைகள் 27 என்பதே இன்றைய நிலை.

கியூப மாணவர்களுக்குப் படிக்கக் கட்டணமும் கிடையாது. 100% மானியத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் அரசே கல்வி அளிக்கிறது. பல்கலைக்கழக - கல்லூரி படிப்பு என்பதும் வெறும் பாடம், தேர்வு என்பதோடு முடிந்துவிடுவது அல்ல

நாட்டில் 27 பேரில் ஒருவர் ஆசிரியர். வேலை நேரம் போக உள்ளூர் தேவைகளுக்குப் பள்ளிக்கூடம் பயன்படுத்தப்படுகிறது. விவசாய உற்பத்தி பொருட்களைத் தற்காலிகமாக வைத்தல், மாலைநேர இயக்கம், அரசு சார்ந்த அமைப்புக் கூட்டங்கள் நடத்துதல், திருமணங்கள் உட்படப் பலவற்றுக்குப் பள்ளி வளாகம் சமூகத்தின் ஒரு அங்கமாகச் செயல்படுகிறது.

நாட்டில் வருடாந்தர பட்ஜெட்டில் கல்விக்குக் கியூபா ஒதுக்குவது 13%, இந்தியா சென்ற வருடம் ஒதுக்கியதோ 3%. அங்கே 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் வகுப்பறை விகிதாசாரம் உட்படப் பல அற்புதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்....

நூலகத் திறப்பு விழா & புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
03/05/2022

நூலகத் திறப்பு விழா & புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

நீர் நிறைந்த மேகம் ஒன்று இருக்கிறது. அது வறண்ட பகுதியில் மழையாக பொழிவது சரியா? அல்லது, வளம் பூத்துக் குலுங்கும் சோலைகளில...
29/04/2022

நீர் நிறைந்த மேகம் ஒன்று இருக்கிறது. அது வறண்ட பகுதியில் மழையாக பொழிவது சரியா? அல்லது, வளம் பூத்துக் குலுங்கும் சோலைகளில் இறங்குவது சரியா?
தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஒரு பக்கம், பள்ளி ஒரு பக்கம் என மிகையாக நீரூற்றுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் பற்றாக்குறைகள் அதிகம். ஏக்கம் அதிகம். தாகம் அதிகம். இங்கு தானே மழை இறங்க வேண்டும். இறங்கினோம்!

JKM அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவுப் போட்டியை கடந்த வாரம் நடத்தினோம். இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 28.04.2022 மாலை நடைபெற்றது. மர நிழல் விரித்த பந்தலுக்கு வந்தார்கள் மாணவர்கள். அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள்.

விழி கல்வி வட்டத்தின் பொருளாளர் தோழர் மலர்விழி நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கினார். எழுத்தாளர் சுபா, சமூக செயல்பாட்டாளர் நிவேதிதா ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

இது போன்ற போட்டிகளை அரசுப் பள்ளிகளில் ஏன் நடத்த வேண்டும் என்று புரிய வைத்தார்கள்.
அரசுப்பள்ளி மாணவர்கள் எப்படி தங்களை வளர்த்துக் கொள்ள் வேண்டும் என்று உணர்த்தினார்கள். மூவரும் மாணவர்களுடன் உரையாடியபடியே பேசினார்கள். எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் மற்றும் சாரல் நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள்.
பரிசு பெற்ற 51 பேரில் மிகப் பெரும்பான்மையானோர் முதல் முறையாக கைத்தட்டல் பெறுபவர்கள். பரிசு பெறும் போது இவர்களின் முகங்கள் மலர்ந்தன. சிலருடைய இதயங்களிலாவது நம்பிக்கைச் சுடர் பற்றியிருக்கலாம் என நம்புகிறோம்.
கடந்த 3 மாதங்களில் இந்தப் பள்ளியில் மூன்றாவது முறையாகப் போட்டிகள் நடத்துகிறோம். பொது அறிவுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், பரிசுகள், சிறப்பு வகுப்புகள், விளையாட்டுப் பயிற்சிகள், கலந்துரையாடல் என நமது முயற்சிகள் விரிகின்றன. பள்ளியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முயற்சி செய்கிறோம். நீங்களும் வாருங்கள்.

அனைவருக்கும் கல்வி கொடுப்போம்!

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம்!

சமூக நீதியைப் பாதுகாப்போம்!

”என் அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்க முடியுமா?” இது மருத்துவர்களிடம் அறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை. எந்த நேரத்தில்? ...
28/04/2022

”என் அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்க முடியுமா?” இது மருத்துவர்களிடம் அறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை.

எந்த நேரத்தில்? அவரது தொண்டையில் புற்று நோய் முற்றி விட்டது. உயிருக்கு ஆபத்தான சூழலில் அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்கச் சொல்கிறார்.
காரணம்? தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க வேண்டுமாம்.

”சில நிமிடங்கள் அனுமதி தாருங்கள். லெனினுடைய அரசும் புரட்சியும் முடித்து விடுகிறேன்.” இது சிறை அதிகாரிகளிடம் பகத் சிங் வைத்த கோரிக்கை. லெனினது நூலை முடித்த உடன் தூக்கு மேடை நோக்கி கம்பீரமாக நடந்தான் அந்த மாவீரன்.

எல்லா பெரிய மனிதர்களிடமும் ஒரு பொதுவான விசயம் உண்டு. அது புத்தகம் படிப்பது. பேரறிஞர் அண்ணாவும், புரட்சியாளர் பகத்சிங்கும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள சமூகம் மேம்படும். எல்லா தெருக்களிலும், ”சமத்துவச் சிந்தனையை ஊட்டக் கூடிய விதத்தில் அமைந்த புத்தகங்களுடன் கூடிய, ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்பது பேரறிஞர் அண்ணாவின் கனவு. அண்ணாவின் கனவை நிறைவேற்றினால் நாடு நலம் பெறும்.

29.04.2022 அன்று மாலையில், தந்தைப் பெரியார் இலவச பாடசாலையில் பள்ளி மாணவர்களுக்கான நூலகத்தைத் திறக்க உள்ளோம்.

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” - என்றார் விக்டர் ஹியுகோ.
வாருங்கள் நூலகம் திறப்போம்! குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவோம்!
கூடுதலாக ஒரு விசயம். அன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள்.

“புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

என்ற பாரதிதாசனின் வரிகளை நடைமுறைப்படுத்துவோம். புது வாழ்வு தேடுவோம்!

பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டியை சாரல் மற்றும் விழி கல்வி வட்டம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம் நடத்தின. இதற்கான ...
26/04/2022

பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டியை சாரல் மற்றும் விழி கல்வி வட்டம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம் நடத்தின. இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 28.04.2022 மாலை நடைபெறுகிறது. இடம் JKM அரசு உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை. வாருங்கள்! வாழ்த்துங்கள்!

16/04/2022
15/04/2022
நமது தந்தைப் பெரியார் இலவச பாடசாலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தந்தைப் பெரியார் மன்றத்தி...
15/04/2022

நமது தந்தைப் பெரியார் இலவச பாடசாலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தந்தைப் பெரியார் மன்றத்தின் நிர்வாகி தோழர் கமலக்கண்ணன் அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். பாடசாலை மாணவர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தைப் பெரியார் மன்றத்தின் தோழர் ராஜேந்திரன் அம்பேத்கரை அறிமுகம் செய்து பேசினார். பாடசாலை ஆசிரியர் தோழர் குமார் தன் உரையில் அம்பேத்கரைப் பற்றிய சித்திரத்தை வழங்கினார்.

மாணவர்களிடம் சாதி ஒழிப்பு போராளி அம்பேத்கரைப் பற்றிய அடிப்படைப் புரிதலை வழங்குவதாக இந்த இனிய நிகழ்ச்சி அமைந்திருந்தது. நிறைவாக, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

14/04/2022
மதுரவாயல் பகுதியில் துமி அறக்கட்டளை சார்பில் மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதி ஒழிப்பு போராளி ...
14/04/2022

மதுரவாயல் பகுதியில் துமி அறக்கட்டளை சார்பில் மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதி ஒழிப்பு போராளி டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. பகுதியில் உள்ள இளைஞர்களும், பொது மக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பகுதியில் உள்ள தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சாரல் துணைத் தலைவர் தோழர் பிரகாஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Address

Shop No : 9, 10, Corporation Complex; Chandran Nagar
Chromepet

Alerts

Be the first to know and let us send you an email when Saaral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category