Jeypee FARM

Jeypee FARM Climate Smart Farm & National Awarded Bio-resource Complex. முழுமையான ‌இயற்கை விவசாய இடுபொருள், பயிற்சி‌ மற்றும் பண்ணை கன்சல்டன்சி.‌

🌱 Coming Soon – Jeypee Farm’s AROGYAMA Soil to Plate Single Origin Food StoreWe are delighted to announce the launch of ...
29/07/2026

🌱 Coming Soon – Jeypee Farm’s AROGYAM

A Soil to Plate Single Origin Food Store

We are delighted to announce the launch of Jeypee Farm’s AROGYAM, a model rural smart retail store at our farm campus in Kullursanthai, Virudhunagar, one of India’s Aspirational Districts.

Built on more than three decades of experience in sustainable agriculture, AROGYAM is a unique initiative to connect responsible farmers with responsible consumers through single-origin farm produce, traceability, and organic farming solutions.

🌾 For Responsible Consumers

If you care about where your food comes from, AROGYAM is your destination.

We offer carefully selected single-origin farm products directly from responsible farmers, including:

🌾 Traditional rice and millets
🌶️ Native spices and chillies
🛢️ Chekku-pressed oils
🍯 Honey and natural foods
🌿 Medicinal plant products
🥜 Value-added farm products

Every product is backed by our commitment to:

✅ Single-origin sourcing
✅ Farm-to-plate traceability
✅ Fair returns to producers
✅ Support for the local rural economy

🌱 For Responsible Farmers

AROGYAM is not just a food store—it is also a knowledge and input centre for sustainable agriculture.

Farmers can access quality agricultural inputs, including:

🌱 Biofertilizers
🦠 Biopesticides
🌿 Organic manures
🪱 Vermicompost
🌾 Soil conditioners
🧪 Micronutrients
🌱 Seeds and seed treatment products

Along with quality products, we aim to share practical knowledge on soil health, climate-smart agriculture, and responsible production.

🌍 Our Vision

We believe the future of agriculture lies in creating transparent, traceable, and trusted food systems that benefit both farmers and consumers.

From healthy soil to healthy food, we are building a bridge from rural farms to urban homes, demonstrating that innovation, quality, and trust can emerge from rural India.

Soil to Plate – Climate • Land • Food

One Health – Our Motto
Healthy Soil • Healthy Food • Healthy People

📍 Jeypee Farm’s AROGYAM
Jeypee Farm Campus
2/527-1, East Street
Kullursanthai – 626004
Virudhunagar District, Tamil Nadu

📞 +91 70100 43267 | +91 93613 71644

We warmly invite responsible farmers, conscious consumers, researchers, institutions, and partners to visit AROGYAM and become part of a trusted Soil to Plate movement.

🌱 முளைப்பாரி காலம் முதல்… நவீன Microgreens காலம் வரை… 🌱காலம் மாறியுள்ளது.பெயர்கள் மாறியுள்ளன.ஆனால் ஒரு விஷயம் மட்டும் மா...
27/07/2026

🌱 முளைப்பாரி காலம் முதல்… நவீன Microgreens காலம் வரை… 🌱

காலம் மாறியுள்ளது.
பெயர்கள் மாறியுள்ளன.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை…

தரமான விதைகளின் முக்கியத்துவம்.

முளைப்பாரி வளர்ப்பதாக இருந்தாலும்,
Microgreens உற்பத்தி செய்வதாக இருந்தாலும்,
வெற்றியின் முதல் படி தரமான விதைகளே.

35 ஆண்டுகளாக விவசாயிகளின் நம்பிக்கையுடன்…

🌾 உங்கள் விதை தேவைக்கு
ஜேப்பி பார்ம்

📞 70100 43267

#முளைப்பாரி

19/07/2026
19/07/2026

ஒரு அர்த்தமுள்ள சந்திப்பு🌳🌍

ஆடி முதலில் சிவகாசியில் Green Forum – Agroforestry மூலம் FAO - GEF - NABARD - TNAU - Carbon Markets தொடர்பு நிகழ்வில் பங்கேற்று, சூழியல் பற்றி சிந்திக்கும் நில உடைமையாளர்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்வில் Senior FAO Consultant Dr. Krishnan Pallasana, திரு. லவ்லி K. செல்வகுமார், முனைவர் A. பாலசுப்ரமணியன் (Dean, Forest College & Research Institute, TNAU), திரு. தமிழ்மாறன் (Isha – Cauvery Calling, Tamil Nadu Coordinator) உள்ளிட்டோருடன் கலந்துரையாடியது பயனுள்ள அனுபவமாக அமைந்தது.

மேலும், எங்கள் ஆரோக்கியம் குழு இயற்கை ஆர்வலர் விவசாயிகள் (திரு. ஜாஹிர், திரு. கோபி, திரு. ஆதித்தன், திரு. விக்னேஸ்வரன் மற்றும் திரு. குமரேசன்) ஆகியோர் பங்கேற்றதும் மகிழ்ச்சியளித்தது.

கார்பன் சந்தைகள் குறித்த நிகழவில் நான் சபை முன்வைத்த முக்கிய சிந்தனை இங்கே பொதுவெளியில் பதிவிடவிரும்புகின்றேன்:

“அதிகரித்த வளிமண்டல கார்பன் அளவினால் ஒளிச்சேர்க்கையின் மைய நொதியான Rubisco-வின் செயல்திறன் அதிகரித்தும் , இனி அதிகரிக்கும் வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் அதிக நீர்தேவையால் இனி வரும் காலத்தில் நிகர லாபம் குறையக்கூடும்”.

இன்று நாம் காணும் அதிக விளைச்சலுக்கு விவசாயத் தொழில்நுட்பம், மேம்பட்ட ரகங்கள், பாசனம் மற்றும் பயிர் மேலாண்மை ஆகியவை முக்கிய காரணிகளாக இருந்தாலும், வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள கார்பன் டைஆக்சைடு அளவும் ஒளிச்சேர்க்கையை ஓரளவு ஊக்குவித்துள்ளது என்பதை பல அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த நிகழ்வு Carbon Fertilization Effect என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பாக C₃ பயிர்களில் - ( சந்தனம் , தேக்கு , குமிழ் , புளி , வேம்பு , என அனைத்து மரங்களும்) ஒளிச்சேர்க்கையை ஓரளவு ஊக்குவித்து, வளர்ச்சி / மகசூல் அதிகரிப்பில் ஒரு பங்களிப்பை வழங்கி கார்பனை மரத்தின் உயிர்த்தொகையிலும் மண்ணிலும் சேமிக்கின்றன.

ஆனால் இந்த நன்மை நிரந்தரமானதல்ல. வெப்பநிலை அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை, மண் உயிரியல் சீர்கேடு மற்றும் பல்லுயிர் இழப்பு தொடர்ந்தால், ஒளிச்சேர்க்கையின் செயல்திறனும் இயற்கையின் கார்பனை சேமிக்கும் திறனும் படிப்படியாகக் குறையக்கூடும்.

எனவே, இயற்கை நமக்கு வழங்கியுள்ள இந்த சாதகமான உயிரியல் காலச் சாளரத்தை (Biological Window of Opportunity) பயன்படுத்தி, மண் கரிமக் கார்பன், நுண்ணுயிர் வளம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண் சூழலமைப்புகளை உருவாக்குவதில் நாம் போதுமான வேகத்தில் செயல்படுகிறோமா?

வெப்பநிலை உயரும்போது, இலைகளிலிருந்து நீராவி வெளியேறும் தேவை (Transpiration Demand) அதிகரிக்கிறது. தன்னுள் உள்ள நீரைப் பாதுகாக்க தாவரங்கள் இயற்கையாகவே தங்களின் ஸ்டோமேட்டா (Stomata) எனப்படும் நுண்துளைகளை ஓரளவு மூடத் தொடங்குகின்றன. இதனால் CO₂ உட்புகுதல் குறைகிறது; Rubisco-வின் கார்பன் நிலைநிறுத்தும் செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, வளிமண்டலத்தில் CO₂ அதிகரித்திருந்தாலும், வெப்பம் மற்றும் நீர் அழுத்தம் காரணமாக ஒளிச்சேர்க்கையின் மொத்த செயல்திறன் குறையக்கூடும்.

இதனை ஈடுகட்ட, பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அதிக அளவு நீர்ப்பாசனம் செய்து, மரங்களை தொடர்ந்து வளர்க்க முயற்சிக்கப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு இலவச அல்லது மானிய மின்சாரம் வழங்கப்படுவதால், சில நேரங்களில் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய பொருளாதார ஊக்கம் குறைகிறது. இதன் விளைவாக, தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுத்துப் பயன்படுத்தப்படும் சூழல்கள் உருவாகின்றன.

நீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் காலநிலையில், இந்த நடைமுறை நிலத்தடி நீர்வளத்தின் நிலைத்தன்மையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஆழத்திலிருந்து நீரை தொடர்ந்து எடுத்துப் பாசனம் செய்வதற்கான ஆற்றல் பயன்பாட்டையும் அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் மறைமுக கார்பன் உமிழ்வுகளையும் (Indirect Carbon Emissions) கணக்கில் எடுத்தால்தான் நிகர கார்பன் சேமிப்பை (Net Carbon Sequestration) சரியாக மதிப்பிட முடியும்.

மேலும், விருதுநகர் போன்ற வறண்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு பல இடங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இந்த நீரை தொடர்ந்து பாசனத்திற்குப் பயன்படுத்தும்போது, நீர் ஆவியாகிவிட்டாலும் அதிலுள்ள உப்புகள் மண்ணிலேயே படிந்து சேர்கின்றன.

குறிப்பாக நல்ல கரிசல் (Black Cotton) நிலங்களில், இந்த உப்புச் சேர்க்கை காலப்போக்கில் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை பாதிக்கக்கூடும்.

எனவே, எதிர்கால கார்பன் சந்தைகள் மரம் எத்தனை நடப்பட்டது என்பதைக் காட்டிலும், அந்த மரங்கள் எவ்வளவு நிலையான முறையில், குறைந்த நீர் மற்றும் குறைந்த ஆற்றல் பயன்பாட்டுடன் வளர்க்கப்படுகின்றன என்பதற்கும் மதிப்பளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த நிகழ்வில் Jeypee Farm’s Arokyam Soil to Plate நல்மண் - நல் உணவு முயற்சியையும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பும், எங்கள் இயற்கை விவசாயிகளின் BRC மூலம் NBS வழியில் மண்ணில் கார்பன் சேமிப்பு வழி மூலம் கிட்டிய ஆரோக்கிய குதிரைவாலி மதிப்புகூட்டல் முயற்சியினை Senior FAO Consultant Dr. Krishnan Pallasana அவர்களிடம் விளக்க வாய்ப்பும் கிடைத்தது.

எங்கள் விவசாயிகளின் நம்பிக்கை மிகவும் எளிமையானது.

நிலத்தின் உரிமை என்பது ஒரு உரிமை மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய சமூகப் பொறுப்பு.

அந்தப் பொறுப்பை உணர்ந்து, எங்கள் விவசாயிகள் மண்ணை பொறுப்புடன் பராமரிக்கவும், வேதிப்பொருள் சார்பைக் குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் உறுதியேற்றுள்ளனர்.

அதே நேரத்தில், காலநிலை நடவடிக்கை (Climate Action) என்பது அரசுகள், கார்பன் சந்தைகள் அல்லது வெளிப்புற நிதி உதவிகளை மட்டும் காத்திருக்கக் கூடாது என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.

பொறுப்புடன் விளைவிக்கும் விவசாயிகளையும், பொறுப்புடன் வாங்கும் நுகர்வோர்களையும் இணைப்பதே எங்களின் நோக்கம்.

உணர்வுபூர்வமான நுகர்வு (Conscious Consumption) உருவானால், காலநிலை நடவடிக்கையும் விவசாயியின் வாழ்வாதாரமும் வெளிப்புற ஆதரவுகளை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

கார்பன் கிரெடிட் என்பது ஒரு முக்கிய ஊக்கக் கருவி. ஆனால் எதிர்கால வேளாண்மையின் வெற்றி, உயிருள்ள மண், ஆரோக்கியமான சூழலமைப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் விவசாயிகளின் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றின் மீது அமையும் என்பதே என் உறுதியான நம்பிக்கை.

இயற்கை நமக்கு வழங்கியுள்ள இந்த சாதகமான உயிரியல் காலச் சாளரத்தை (Biological Window of Opportunity) பயன்படுத்தி, மண் கரிமக் கார்பன், நுண்ணுயிர் வளம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண் சூழலமைப்புகளை பகுத்தறிவுடன் கட்டுமானம் செய்வதே நில உரிமையாளர்களின் பொறுப்பு.

இந்த அருமையான நிகழ்வை ஏற்பாடு செய்த திரு. லவ்லி K. செல்வகுமார் அவர்களுக்கும், குழுவிவசாயிகளுடன் இந்த கார்பன் சந்தை ஓட்டித கூட்டத்தில் பங்கு பெற தூண்டிய தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன் மற்றும் அனைத்துபங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பழனீஸ்வர்
செயல்வழி பேராசிரியர்
ஜேப்பி பார்ம் ஆரோக்கியம்
விருதுநகர்
7010043267

Skill development program on Climate Smart Agriculture for farm professionals.
06/05/2026

Skill development program on Climate Smart Agriculture for farm professionals.

விவசாயம் / வாழ்க்கை / அல்லது அரசியல் — என அனைத்திலும் அமைதியாக மறைந்திருக்கும் மிகச்சிறிய விஷயங்களே பெரும்பாலும் முழுமைய...
12/04/2026

விவசாயம் / வாழ்க்கை / அல்லது அரசியல் — என அனைத்திலும் அமைதியாக மறைந்திருக்கும் மிகச்சிறிய விஷயங்களே பெரும்பாலும் முழுமையான அறுவடையை தீர்மானிக்கின்றன.”

லீபிக் (Liebig) விதியினை நினைவில் கொள்ளுங்கள் — நீங்கள் எதற்கு குறைந்த அளவு முக்கியம் தந்து கவனிக்கத் தவறுகிறீர்களோ, அதுவே இறுதி மகசூலை தீர்மானிக்கும்.

படத்தில் இரும்புச்சத்து, துத்த குறைபாட்டைக் காண்கிறீர்களா?

இதற்கு இன்றைய விவசாயச் சூழலில் EDTA பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அதன் செயல்பாடு முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா?

உண்மையில் வேலை செய்வது எது? வெறும் கூச்சல் எது? எப்படி நாம் இயற்கை வளத்தின் துணையுடன் எளிதாக நுண்ணூட்ட குறைபாட்டை களையலாம் என்று புரிந்து செயல்படுத்துவோம்.

விவசாயம் / வாழ்க்கை / அல்லது அரசியல் — என அனைத்திலும் அமைதியாக மறைந்திருக்கும் மிகச்சிறிய விஷயங்களே பெரும்பாலு...

“Come… Connect… Share…”Harnessing local natural resources for sustainable growth in an Aspirational District!The monthly...
24/03/2026

“Come… Connect… Share…”

Harnessing local natural resources for sustainable growth in an Aspirational District!

The monthly meeting of the Virudhunagar District Natural Farmers will be held at the Jeypee Sustainability Foundation, Jeypee Farm Campus, Kullursanthai.
Key Discussion Themes:
* Sustainable Production: How to grow healthy foods naturally, even in challenging terrains, with a minimal carbon and water footprint.
* Local Economy: Utilizing the medicinal plant resources of Virudhunagar district to create healthy lifestyles and boost the local economy.
Benefits for Natural Farmers (via the Bio-Resource Complex):
* Simple Bio-farming techniques to enhance farm productivity.
* Insights into building an economy based on local natural resources.
* Clarity on Value Addition, market linkages, and sustainable growth opportunities.
A Special Request to Participants:
👉 Farmers, collectors, startups, entrepreneurs, and development enthusiasts of Virudhunagar district are kindly requested to bring bio-resources or medicinal plants available in their respective areas to this meeting.
How will this meeting help you?
* To showcase and document your unique produce and practices.
* To identify emerging market opportunities.
* To exchange experiences with fellow farmers and collectors.
🗓️ Event Details
* Date: Saturday, March 28, 2026
* Time: 3:00 PM – 5:00 PM
* Venue: Jeypee Sustainability Foundation,
Jeypee Farm Campus, Kullursanthai,
Virudhunagar – 626004.
📍 Location (Google Maps): [Link provided]
📌 Advance Registration Required
All those wishing to participate, please register by contacting the following numbers:
📞 70100 43267
📞 94835 03392
📞 73052 13392
🛒 In-Person Registration:
You may also register your name at 'Arokyam – Virudhunagar Natural Farmers Direct Market', Vadiyan Street, Virudhunagar.
> 🌾 “Sustainable growth through local resources – The path to progress for Virudhunagar!”

Address

2/527/1, East Street, Kullurchandai, Virudhunagar, Tamilnadu
Aruppukkottai
626004

Opening Hours

Monday 8:45am - 7:45pm
Tuesday 8:45am - 7:45pm
Wednesday 8:45am - 7:45pm
Thursday 8:45am - 7:45pm
Friday 8:45am - 7:45pm
Saturday 8:45am - 7:45pm
Sunday 8:45am - 2:30pm

Telephone

+917010043267

Alerts

Be the first to know and let us send you an email when Jeypee FARM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jeypee FARM:

Shortcuts

Share