11/02/2018
ஜல்லிக்கட்டுல அசம்பாவிதம் நடக்க கூடாதுன்னு மாற்றி அமைச்ச சட்டமே இன்று அசம்பாவிதத்துக்கு காரணமாக இருக்கின்றதா?????
காலம் காலமா பாரம்பரியமா சாதாரணமாக நடத்திட்ட இருந்தப்ப கூட எங்க ஜல்லிக்கட்டுல எங்கனாச்சும் ஒருசில மாடுபிடி வீரர்கள் வீரமரணம் அடைவார்களே தவிர, காளைகள் அடிபட்டு இறந்ததாக சரித்திரம் இல்லை.
ஆனால் இன்னைக்கு காளைகள் இறந்து போகுதுனா அதுக்கு ஜல்லிக்கட்ட பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாத பக்குவமில்லாதவங்க (இப்படித்தான் நடத்தனும், அப்படித்தான் நடத்தனும், அத பன்ன கூடாது இத பன்னக்கூடாதுன்னு) மாத்தி அமைச்ச விதிமுறைதான் காரணம் என்றால் யோசிக்கதானே வேண்டி இருக்கு.
ஜல்லிக்கட்ட பற்றி தெரியாத ஒருவர் அதுக்கான விதிமுறைய எழுதுனா என்ன என்ன விளைவுகள சந்திக்க வேண்டி வரும் என்று இன்னைக்கி நல்லா எல்லாரும் பாத்துட்டோங்கய்யா...
பாரம்பரியமா கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநல்லூர் என்ற தென்னலுர்ல ஒன்னு இல்ல இரண்டு இல்ல ஏழு வாடி, (எப்டி ஏழு வாடில) ஜல்லிக்கட்ட நடத்துனப்ப கூட எந்த ஒரு மாடும் அடிபட்டு இறந்து போனதில்லய்யா... காரணம் சென்ற வருடம் வரை தென்னலூர்ல ( #சதுர வாடி #) மாடு நல்லா நிதானமா வெளியே வந்து வீரர்கள் மத்தியில் பாஞ்சி வெற்றி பெரும்.
ஆனால்!!!
இந்த வருடம் நாங்க சொன்ன விதிமுறை படிதான் நீங்க ஜல்லிக்கட்ட நடத்தனும்ன்னு சதுர வாடிய குருக்கு (நேர்) வாடியா வச்சதாலதான், இதுவரை எந்த ஒரு வாடிலயும் பிடிபடாத எங்கள் கொம்பன் (ஜல்லிக்கட்டு மீது தீரா ஆசை கொண்ட அமைச்சர் திரு.விஜயபாஷ்கர் அவரோட காளை) அடிபட்டு இறந்து போச்சுன்னா அதுக்கு மாற்றி அமைச்ச விதிமுறை தான் காரணம் என்றால் மறுக்க முடியுமா உங்களால்... அந்த காளை எப்பேர்ப்பட்ட காளை தெரியுமாங்கய்யா உங்களுக்கு... அப்பேர்ப்பட்ட காளையை சாச்சிபுட்டீங்கலேய்யா.
எப்போதும் நடத்திட்டு இருந்த பானிலயே நடத்தி இருந்தோம் என்றால் இன்னைக்கு எங்கள் கொம்பன் அவனோட வெற்றி படிகட்டுகலில் மேலும் ஒரு வெற்றிய ருசிச்சிருப்பானய்யா. தமிழ்நாட்டின் சிறந்த காளையா மேலும் பல வாடிகலில் சுற்றி திரிந்திருப்பானய்யா... வாடிய மாத்தி அமைச்சி கொண்டுபுட்டீங்கய்யா... இதற்க்கு முழு காரணம் யார்???
முன்ன நடத்துனபடியா இப்ப ஜல்லிக்கட்டு நடந்திட்டு இருக்கு. சுதந்திரமா நடத்திட்டு இருந்தோம்யா எந்த ஒரு ப்ரச்சனையும் இன்றி. இந்த அளவுக்கு எங்கள அடக்கி ஒடுக்கலய்யா.
மேலும் மேலும் எங்கள விதிமுறை என்ற பெயரில் அடக்கி ஒடுக்காதீங்கய்யா.
கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கய்யா.
கேவலம் எங்க தமிழக மக்களில் எள் அளவு கூட இல்லாத எதோ பணம் மோகம் கொண்ட (பீட்டா) ஒரு கூட்டம் கோரிக்கை வச்சான்னு நாங்க காலம் காலமா பாரம்பரியமா நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டிங்க.
ஒட்டுமொத்த தமிழ் மக்கள் ஒன்று திரண்ட பிறகு தடைய வேறு வழியின்றி விடுவிச்சீங்க..
இப்ப விதிமுறை என்ற பெயரில் ஒடுக்குரீங்க.
தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் விதிமுறைய தளர்த்தி நல்ல முறையில் ஜல்லிக்கட்ட நடத்திட வழிவகை செய்ய வேண்டுகிறோம்...
********************************************
இன்று தென்னலூர் களத்தில் வீரமரணம் அடைந்த சுகாதாரத்துரை அமைச்சர் திரு.விஜயபாஷ்கர் அவர்களின் கொம்பனுக்கு வீர வணக்கத்தினை தெரிவித்து அரியலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறோம்...
வீர வணக்கம் - #கொம்பா #...
**********************************************