22/05/2024
நினைச்சேன் சிரிச்சேன் 😃😁😆
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் T-20 லீக் போட்டிகளுக்குமான ரசிகர்களுக்கிடையேயான வித்தியாசம் மிகப் பெரியது சர்வதேச போட்டிகளின் போது ஒரு அணியின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் IPL போன்ற T-20 லீக் போட்டிகளின் போது தங்களுக்கு பிடித்தமான தேசிய அணியின் வீரர்கள் யாருமே இல்லாத லீக் அணியின் ரசிகர்களாக கூட இருக்கலாம் அதிலே தப்பு ஏதும் கிடையாது. ஆனால் இப்போது இருக்கின்ற நிலமை ரொம்பவும் வித்தியாசமானது. T-20 லீக் போட்டிகளின் போது தாங்கள் ஆதரவளிக்கும் T-20 லீக் அணியின் மீதான மோகம் காரணமாக தங்களுக்கு பிடித்தமான தேசிய அணியின் வீரரை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் தூற்றி கொண்டாடுவார்கள். இதை கூட கடந்து போய் விடலாம் ஆனால் திரும்பவும் தேசிய அணி என்று வரும்போது தாங்கள் கழுவி ஊற்றிய அதே வீரர்களை கடவுளை விட ஒரு படி மேலே வைத்து கொண்டாடுவார்கள். இது தான் ரொம்ப கொடுமையான விஷயம். பொதுவாக ஆசிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் தான் இதில் முடி சூடா ராஜாக்கள்.
இந்த கழுவி ஊற்றல்கள் + கொண்டாட்டங்கள் எல்லாம் ஸ்டார் பிளேயர்களை மையப்படுத்தி நடைபெறுவது எல்லாவற்றையும் விட வேதனையானது. ஒரு சிலரின் குண இயல்பு எப்போதும் மாற்ற முடியாதது. விராட் கோஹ்லியின் இயல்பான குணம் ஆக்ரோஷம். தனது அணி வெற்றி பெறும் போது அவர் அதனை கொஞ்சம் அதிகமாக வெளிக்காட்டுகிறார். இதை தவறு என்று போர்க்கொடி தூக்குகின்ற நம்மவர்கள் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - இங்கிலாந்து, இந்தியா - அவுஸ்திரேலியா, இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டிகளின் போது இதை விட பலமடங்கு கூடுதலான ஆக்ரோசத்தை விராட் கோஹ்லியிடம் எதிர்பார்க்கிறார்கள். இன்று கோலியின் தோல்வியையும் அன்று ஹர்திக் பாண்டியாவின் தோல்வியையும் கொண்டாடி மகிழ்பவர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். T-20 உலகக்கிண்ணம் தொடங்கியதும் இந்த பச்சோந்திகள் கோலியையும் பாண்டியாவையும் தோளில் தூக்கி வைத்து கொண்டாடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ 😏🤷