11/07/2026
சுற்றுநிருபம் 03/2024 – பதவி வெறிதாக்கல் (Vacation of Post) அறிவித்தல்களுக்கு எதிராக மேல்முறையீடுகளைச் சமர்ப்பித்தல்
***************************************
இந்த சுற்றுநிருபம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது
அறிமுகம்
அரச சேவையில் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், பணிக்கு சமூகமளிக்காமல் தொடர்ச்சியாக வருகை தராத உத்தியோகத்தர்களுக்கு எதிராக "பதவி வெறிதாக்கல்" (Vacation of Post) நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், இந்நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் நடைமுறைப் பிழைகள் காரணமாக ஊழியர்களின் இயற்கை நீதி உரிமைகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசாங்க சேவை ஆணைக்குழு சுற்றுநிருபம் 03/2024 ஐ வெளியிட்டுள்ளது.
சுற்றுநிருபத்தின் நோக்கங்கள்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பதவி வெறிதாக்கல் நடைமுறைகளை தாமதமின்றி மேற்கொள்ளுதல்.
ஊழியர்களுக்கு நியாயமான விளக்கம் அளிக்கும் வாய்ப்பை வழங்குதல்.
மேல்முறையீட்டு உரிமையை உறுதிப்படுத்துதல்.
இயற்கை நீதி மற்றும் நிர்வாக நியாயத்தைப் பாதுகாத்தல்.
முக்கிய ஏற்பாடுகள்
1. விரைவான அறிவித்தல் ஒரு உத்தியோகத்தர் பணிக்கு சமூகமளிக்காத தகவல் அறியப்பட்டவுடன், 5 வேலை நாட்களுக்குள் பதவி வெறிதாக்கல் அறிவித்தல் வழங்கப்பட வேண்டும். தேவையற்ற தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.
2. விளக்கம் பெறுதல் உத்தியோகத்தர் வருகையின்மைக்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், அவை ஸ்தாபன விதிக்கோவைக்கு அமைவாக பக்கச்சார்பின்றி ஆராயப்பட வேண்டும்.
3. நியாயமான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், மருத்துவச் சான்றுகள் மற்றும் பிற பொருத்தமான தகவல்களை பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
4. மேல்முறையீட்டு உரிமை ஒழுக்காற்று அதிகாரியின் முடிவில் திருப்தியில்லாத உத்தியோகத்தர், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம்.
5. அறிவித்தல் கடிதத்தில் குறிப்பிடுதல் மேல்முறையீடு செய்யும் உரிமை, காலவரம்பு மற்றும் அதற்கான நடைமுறை ஆகியவை பதவி வெறிதாக்கல் தொடர்பான கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
பாடசாலை அதிபர்களுக்கான முக்கியத்துவம்
***********************************
ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வருகையை தினசரி துல்லியமாகப் பதிவு செய்தல்.
தொடர்ச்சியான வருகையின்மை ஏற்பட்டவுடன் உடனடியாக