03/04/2026
1957ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை இலங்கையர் எவரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த வெள்ளம் நாடு முழுவதும் பல பகுதிகளை பாதித்தாலும், வாழைச்சேனைப் பகுதியில் அது தனது அகோர தாண்டவத்தை வெளிப்படுத்தியது.
குடும்பிமலை பிரதேசத்திலிருந்தும் மகாவெலியிலிருந்தும் புறப்பட்ட பெரு நீர், வாழைச்சேனை – ஓட்டமாவடி பாலத்தில் வந்து திரண்டு நின்றது. பின்னர் அந்த நீர் ஓட்டமாவடிக்குள் புகுந்து, பாலத்திலிருந்து முச்சந்தி வரை உள்ள கட்டை உடைக்க முயன்றது.
அந்த கட்டை உடைந்தால், வாழைச்சேனை முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்ற ஆபத்தான சூழ்நிலை உருவானது.
இந்த மிகக் கடினமான தருணத்தில், கல்குடா டைவர்ஸ் உறுப்பினர்களும் பிரதேச இளைஞர்களும் தன்னலமின்றி களத்தில் இறங்கினர்.
1957.11.07 கல்குடா தொகுதி வாழைச்சேனைப் பகுதியில் அனர்த்த அவசர நடவடிக்கை ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்டது.
அன்று பகலில், பாலத்துக்கும் முச்சந்திக்கும் இடையில் பிரதான பாதையை வெட்டி, வெள்ள நீர் கடலுக்கு செல்ல வழி செய்தனர். இந்த துணிச்சலான செயல் மூலம் வாழைச்சேனை மக்கள் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இதுவே “மூவ் கல்குடா டைவர்ஸ்” அமைப்பின் அனர்த்த அவசர சேவையின் முதலாவது மனிதாபிமான பணி ஆகும்.
பின்னர், 2021.02.21 அன்று, இந்த சேவை மறுசீரமைப்பு செய்யப்பட்டு, காலத்திற்கேற்ற வகையில் தனது மனிதாபிமான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
“எங்கும் – எதிலும் மக்களை காப்போம்” என்ற உயர்ந்த நோக்குடன், எந்த இடத்தில் மக்கள் துயரத்தில் இருந்தாலும் அங்கு சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. இலங்கை தேசிய சுதந்திர தினமோ, இயற்கை அனர்த்தமோ – எப்போதும் மக்களுடன் நிற்கும் சேவையாக இது விளங்குகிறது.
ஆனால், இவ்வளவு காலமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் இந்த அனர்த்த அவசர சேவைக்கு இன்னும் சொந்த வாகனம் இல்லாதது கவலையான விடயமாகும்.
இதனை கருத்தில் கொண்டு, ஒரு அனர்த்த அவசர வாகனத்தை கொள்வனவு செய்ய நிர்வாகம் முடிவு செய்து, நன்கொடை சேகரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதுவரை ரூ. 18 இலட்சம் சேகரிக்கப்பட்டுள்ளதாலும், இன்னும் நிதி தேவைப்படுகிறது.
எனவே, அன்பார்ந்த நல்ல உள்ளங்களே,
“ஒரு உயிரைக் காத்தால், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காத்தமைக்கு சமம்” என்ற உயர்ந்த கருத்தை மனதில் கொண்டு, தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி இந்த மனிதாபிமான பணியில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.