01/10/2025
ுழுமம்
#அரியாலை_விளையாட்டு_வீரர்களை எமது ஊரின் எதிர்கால நன்மைக்காக ஒன்று திரளுமாறு அழைக்கின்றோம்.
- நிர்வாகம் -
அரியாலை கிழக்கு — காரைமுனங்கு பகுதியில் திண்மக்கழிவுகள் தரம் பிரிக்கும் நிலையத்தை அமைக்க வேண்டாம்
● பூம்புகார், நாவலடி, கிழக்கு அரியாலை கிராமங்களில் வாழுகின்ற பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் ஆரோக்கியம் பாதிப்படையும். அண்டியுள்ள கிராமங்களில் வாழ்பவர்களும் இதனால் பாதிப்படைவார்கள்.
● கடல், கடற்கரை மற்றும் கடல் நீர் மாசடைந்து மீன்பிடித்துறை பாதிக்கப்படும்.
● கிழக்கு அரியாலை, யாழ் நகருக்குள் அமைந்துள்ள, மக்கள் ஓய்வு நேரத்தினைக் கழிக்கக்கூடிய ஒரேயொரு கடற்கரை பிரதேசம் பாவனைக்கு உகந்ததல்லாததாக மாறும்.
● விளைச்சல் நிறைந்த வயல்கள் வேளாண்மை செய்ய முடியாத நிலங்களாக மாறும்.
● அரியாலை கச்சான் என்பது பிரசித்தமானது. இங்குள்ள திட்ட நிலங்கள் அழிவடையும்.
● மண்ணின் தரம் குன்றும். விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறும். தென்னந்தோட்டங்கள், பனங்கூடல்கள் அழிந்துபோகும்
● கடல் கரை தாவரங்கள் மற்றும் கரை சுற்றுச்சூழல் அழியும்.
● நிலத்தடி நீர் மாசடையும். இது இங்கு ஏற்கனவே நிலவுகின்ற குடிநீர்ப் பிரச்சினையை இன்னும் மோசமாக்கும்.
● மாசடைந்த நீரினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு.
● சூழலியல் சுற்றுலாத்துறையினை மையமாகக் கொண்டு, அபிவிருத்தி செய்யப்படக்கூடிய பிரதேசம், குப்பை மேடாக மாறி, முற்றாக அழிவடையும்.
● இப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
● யாழ் நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வளங்கள் நிறைந்த பிரதேசம் நிரந்தரமாக அழிக்கப்படும்.
● இங்கு வாழுகின்ற மற்றும் ஆண்டுதோறும் வரும் புலம்பெயர் பறவைகள் பாதிக்கப்படும். இதோ இயற்கை சூழலை அழிக்கும்.
● எமது உறவுகளின் நினைவுகளைத் தாங்கி நிற்கின்ற மயானத்தில், மூக்கைப் பொத்திக்கொண்டு
இறுதிசை சமயச் சடங்குகளை/கிரிகைகளை நிறைவேற்றுகின்ற, நினைவேந்தல்களை செய்கின்ற இடமாக மாறும்.
● எமது மக்களின் முயற்சியால் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தடுக்கப்படும்.