24/01/2025
அட்டாளைச்சேனை அல்-ஆரியன் விளையாட்டுக் கழகமத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாக தெரிவும் !
அல்-ஆரியன் விளையாட்டு கழகத்தின் 2025/26 ற்கான பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் கழகத்தின் தலைவர் எம்.எம். இர்சான் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பீச் ஹவுசில் நேற்று முன் இரவு (23) இடம் பெற்றது.
செயலாளரினால் சென்ற வருட கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு சபையோரினால் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, எதிர்காலத்தில் கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, புதிய நிர்வாகத்தெரிவும், கழக விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
2025/26 ற்கான தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம்,
1. செயலாளர் - k.அஸீர் சர்ஜூன்
2. உப-செயலாளர் - றிபாஸ்
3. தலைவர் - JM.றிஸ்வி
4. உப-தலைவர் - MM.இர்சான்
5. பொருளாளர் - MI.மன்சூர்
6. கணக்கு பரிசோதகர் - AHM.ஆதில்
7. முகாமையாளர் - R.றசீன்
8. ஆசோசகர்களாக -
01. நசீர்
02. ஹசன்
03.றசீன்
04. சர்பீன்
05. பாரித்
இவ் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னர் கழகத்தின் தலைவர் JM.றிஸ்வி அவர்களின் உறையினைத்தொடர்ந்து ஆலோசகர்களின் உறையும் இடம்பெற்றது. அதன் பின்னர் கழக உறுப்பினர்களுக்கிடையில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்ட பின்னர் இராபோசனத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.