06/05/2025
தமிழ்நாடு அணி சார்பாக திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் மாணவர்கள் சாதனை
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில்
மே 2.5.2025 முதல் 4.5.2025
ஆகிய மூன்று தினங்களில்
பட்டியாலா உள்ள பெஸ்ட் ஷூட்டர்ஸ்
சூட்டிங் அகாடமியில்
National Shooting Federation Cup-2025 போட்டி நடைபெற்றது,
இப்போட்டியில் பஞ்சாப், தமிழ்நாடு, உ.பி. டெல்லி, ம.பி., ஆந்திரா, உத்தரகாண்ட், கேரளா ஆகிய மாநிலங்கள் மாநிலங்களில் இருந்து 267 போட்டியாளர்கள்
பங்கேற்றன
போட்டியில்
தமிழ்நாடு அணி சார்பாக
திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் பயிற்சியாளர் இரா.குணசேகரன் தலைமையில் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சிபிஎஸ்இ (CBSE) மெட்ரிக் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரா.தர்ஷன் ராஜ் 12,வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்டு
தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
அதேபோல் சீனியர் 21 வயது முதல் 50 வயது வரை பிரிவில் இரா.குணசேகரன்
ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றும்,
அதனை தொடர்ந்து 16, வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் பிஸ்டல் போட்டியில் கலந்து கொண்ட கொரடாச்சேரி அருகே உள்ள வாழச்சேரி மதர் இந்தியா பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன் எஸ்.எம்.சரண் வெள்ளி பதக்கமும், 16,வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட திருவாரூர் அருகே உள்ள எட்டியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன் கே.ஸ்ரீவரதா வெண்கல பதக்கம் வென்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பயிற்சியாளர்
இரா. குணசேகரன் தெரிவிக்கும்போது... தமிழ்நாடு அணி சார்பாக போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்த
பட்டியாலா வாட் பிரதிநிதி மிஸ் குல்பீர் கவுர் வெற்றி பெற்ற மாணவர்களை தனது இல்லத்திற்க்கு அழைத்து பரிசுகள் வழங்கி வாழ்த்தி விளையாட்டுடன் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். ஒவ்வொருவரும் இந்திய நாட்டிற்காக பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என வாழ்த்து தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மேலும் திருவாரூர் மாவட்டத்திலிருந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதை அறிந்த இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளரும், டாக்டர் ஆர்.ரமேஷ் மற்றும் இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் வழக்கறிஞர் பிரீத்தி பாண்டியா, செயல் தலைவர் டாக்டர் எம்.செல்வராஜ் ,பொதுச்செயலாளர் டாக்டர்கே.திருநாவுக்கரசு,
ஹரியானா தேசிய பொதுச்செயலாளர் பூப்பால் சிங்,ஒரிசா பொதுச்செயலாளர் பார்த்தசாரதி முகியா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது.
அதைபோல் திருவாரூர் ஏர் ரைபிள் சூட்டிங் கிளப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் விவசாய பூமியான டெல்டா மாவட்டத்திலிருந்து பஞ்சாப் மாநிலம் சென்று தமிழ்நாடு அணி சார்பாக போட்டி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று வெற்றி வாகை சூடி வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற திருவாரூர் வருகை தந்த மாணவர்களை பயிற்சி மையத்தின் சார்பாகவும் பெற்றோர்களும் சிறப்பாக வரவேற்பளித்து வாழ்த்து தெரிவித்தனர்.