23/12/2024
தமிழக அரசு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% சதவீத இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு அரசாணைப்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் / இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையில் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இன்று தேக்வாண்டோ வீராங்கனைகள் செல்வி மோனஸ்ரீ, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் செல்வி அருளரசி, நீலகிரி மாவட்டம் ஆகியோர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அரசாணை பெற்ற வீராங்கனைகளுக்கும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அவர்களுக்கும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்களுக்கும், அனைத்து மாவட்ட டேக்வாண்டோ இணைப்பு சங்கங்களுக்கும் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கனம்
மாஸ்டர் P. செல்வமணி,
சர்வதேச நடுவர், பொதுச்செயலாளர் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம்.